Followers

Wednesday, August 25, 2010

சமையல் குறிப்பு : கூழ் வற்றல் குழம்பு

நம் வீட்டில் அரிசியில் வடகம் செய்து வைத்திருப்பர். அதனை கொண்டு கூழ் வற்றல் குழம்புசெய்வது எப்படி என்று பார்ப்போம். சும்மா காரசாரமா செய்து சாப்பிடுப் பாருங்கள். அதன் ருசியே தனி தான்.


தேவையான பொருட்கள் :


கூழ் வற்றல் வடகம் - 20
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார்பொடி - இரண்டரை (2 1/2) ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 7 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை: 
  • கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்).
  • வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும்.
  • அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும்.
  • கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

0 comments:

Post a Comment

Labels

actress (1375) hot photos (1005) cinema news (536) Actor (459) Images (151) others (124) Hot And Spicy (52) songs (33) Actorss (30) models (26) Reviews (10) videos (9) Lyrics (5) Privacy Policy (2) cricket (2) Contact Us (1) Movie Mp3 songs (1) Trailers (1) h (1)

Blog Archive