தினமும் ஒரே மாதிரி சமையல் செய்து அலுத்துகொள்ளவதை விட, நம்மிடம் இருக்கும் பொருக்களை கொண்டு ஒரு சில வித்தியாசமான முறையில் சமையல் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் சும்மா அசத்துங்க. அந்தவகையில், இன்றைய சமையல் குறிப்பு 'கொத்தமல்லி சேமியா'.
தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கப்
கொத்த மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழசாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
- நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள்.
- 6 கப் தண்ணீரை காய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேகவிட்டு வடியுங்கள்.
- எண்ணையை காயவைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்த கொத்தமல்லி தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.
- கடாயில் நெய்யை காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, வறுத்து அரைத்த விழுதை சேருங்கள்.
- இந்த விழுதுடன் உப்பை தேவையான அளவு சேருங்கள். அதனுடன் வடித்து வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கலக்குங்கள். கொத்தமல்லி சேமியா ரெடி.
குறிப்பு :
எப்போதுமே சேமியாவை வேகவைக்கும் போது, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர் தான் சேமியாவை சேர்க்க வேண்டும். அப்போது தான் ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் நன்கு வேகும்.
உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!
0 comments:
Post a Comment