கண்ணுக்கு குளுமையான, பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்திசெய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தலை - 1 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
- அரைக்க எடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து, அரைத்துகொள்ளுங்கள்.
- கோதுமை மாவுடன் அரைத்த விழுதுகளை சேருங்கள்
- அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாக
பிசையுங்கள். - பிறகு, சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.
- தோசை கல்லில்/ தவாவில் எண்ணெய் - நெய் கலவையை சேர்த்து வேகவிட்டு எடுங்கள்.
- கண்ணுக்கு குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்.
உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!
0 comments:
Post a Comment